விடை தெரியாத கேள்விகள் 10ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், புத்தகத்திலேயே இல்லாத, புதிய கேள்விகள் இடம் பெற்றுள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், 2014 15ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்ற, 10.60 லட்சம் மாணவர்களில், 1.15 லட்சம் பேர்அறிவியல் பாடத்தில், 100க்கு, 100 எடுத்தனர். 2013 14ல், 69 ஆயிரம் பேர்; 2012  13ல், 38 ஆயிரம் பேரும்சென்டம் எடுத்தனர்.
இதன்படிமூன்று கல்வி ஆண்டுகளில், 10ம் வகுப்பு அறிவியலில், 100க்கு, 100 எடுப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனாலும்கல்வித்தரம் உயரவில்லை என்ற கருத்து நிலவுகிறது. எனவே தேர்வு முறைபாடத்திட்டம்விடைத்தாள் திருத்த முறையை மாற்றகல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர். அதனால்இந்த ஆண்டுஅறிவியலில் சென்டம் எண்ணிக்கையை குறைக் கும் வகையில்கடினமான கேள்விகள் அடங்கிய வினாத்தாள் தயாரிக்கஅரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கேற்பபள்ளி கல்வித்துறையும்அறிவியல் புத்தகத்தில் கூடுதல் கேள்விகளை இணைத்து உள்ளது. ஆனால்இந்தக் கேள்விகளுக்குபாடங்களில் விடைகள் இல்லாததால்மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
மாணவர்களுக்கு சிக்கலான கேள்விகளை கொடுக்கபள்ளி கல்வித்துறையுடன் இணைந்துவினாத்தாள் தயாரிப்பை மாற்ற வேண்டும். அதை விடுத்துபாடங்களில் இல்லாத வினாக்களை மட்டும் கொடுத்துள்ளதால்மாணவர்களும்ஆசிரியர்களும் குழப்பத்துக்கு ஆளாகிஉள்ளனர். இந்த வினாக்களுக்கான விடைகளைத் தெரிந்து கொள்ளமாணவர்கள்கெய்டு வாங்கினால்அதிலும் சரியான விடை இல்லை. ஒவ்வொரு கெய்டிலும் ஒரு விடை கூறப்பட்டு உள்ளது. இதனால்புத்தகத்துக்கும்,வினாக்களும் சம்பந்தமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 
எனவேபள்ளி கல்வித்துறைபுத்தகங்களில் இல்லாத வினாக்களுக்குதனியாககீ ஆன்சர் வெளியிட வேண்டும். இல்லையென்றால்அத்தகைய வினாக்களை நீக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.