சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமில்லை-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழக அரசு கடந்த 2011 நவம்பர் 15-ல் ஒரு அரசாணையை வெளியிட்டது. இதன்படி அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக புதிதாக நியமிக்கப்படுபவர்கள் தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். 2010 ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் 5 ஆண்டுகளுக்குள் இந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்த அரசாணை சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு பொருந்தாது என்று கூறி தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கம் மற்றும் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
ஆசிரியர்களி்ன் தகுதியை உயர்த்து வதற்காக இந்த அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது என்றும் இதுபோன்ற தேர்வுகளை நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஓர் உத்தரவில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள கட்டாய கல்வி உரிமை சட்டம் சிறுபான்மையினர் பள்ளிக்கூடங் களுக்கு பொருந்தாது என்று கூறி யுள்ளது என்பதை மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுபான்மையினர் பள்ளிக்கூடங் களை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் விதிகளை கொண்டு வரலாம். அதற்காக அந்தப் பள்ளிகளின் தன் மையை பாதிக்கும் விதமாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. சிறுபான்மை யினர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் கட்டாயமாக ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத வேண்டும் என நிர்பந்தம் செய்ய முடியாது.
எனவே அரசு உதவிபெறும் மற்றும் உதவி பெறாத சிறுபான்மையினர் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வி்ல் தேர்ச்சி பெறவேண் டும் என தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது. மேலும் 2010-ல் பணிக்கு சேர்ந்தவர்கள் 5 ஆண்டுகளுக் குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வில்லை எனக்கூறி அவர்களுக்கான சம்பளத்தை அரசு வழங்காமல் உள்ளது. அந்த சம்பளத் தொகையை 2 மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசைப் போல, புதுச்சேரி அரசும் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து கடந்த 2015-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணை யும் புதுச்சேரியில் உள்ள சிறுபான்மை யினர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பொருந்தாது.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.