யாருக்கு ஓட்-ட-ளித்தோம் என்பதை காட்டும் கருவியை, 1,400 வாக்-கா-ள-ருக்-கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்த முடியாது

யாருக்கு ஓட்-ட-ளித்தோம் என்பதை காட்டும் கருவியை, 1,400 வாக்-கா-ள-ருக்-கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்த முடியாது' என, 'பெல்' நிறுவன பொறியாளர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் இக்-க-ருவி, 17 சட்டசபை தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ளது. இயந்திரத்தில் ஓட்டுப்பதிவு செய்தவுடன், கருவியின் திரையில் வேட்பாளரின் வரிசை எண், கட்சியின் பெயர், சின்னம் ஆகி-யவை ஏழு வினாடிகள் தெரியும். அடுத்து, 'பீப்' சத்தம் கேட்கும். பின், யாருக்கு ஓட்டளித்தோம் என்ற விவரம் துண்டுச்சீட்டாக பெட்டியில் விழும்.
'இந்த கரு-வியை எல்லா ஓட்டுச் சாவடிகளிலும் பயன்படுத்த இயலாது. 1,350 வாக்காளர் உள்ள ஓட்டுச்சாவடியில் மட்டுமே பயன்படுத்த முடி-யும்' என, 'பெல்' நிறுவன பொறியாளர்கள் செல்வகுமார், ராஜீவ் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
இந்த கரு-வி-யில் தெர்மல் தொழில்நுட்பத்துடன் கூடிய, 'ரோலிங் பேப்பர்' இணைக்கப்பட்டுள்ளது. இதில், 1,400 துண்டு சீட்டுகள்தான் இருக்கும். இத-னால் 1,200 முதல் 1,350 வாக்காளர்கள் உள்ள ஓட்டுச்சாவடிகளில் மட்-டுமே இக்கருவியை பயன்படுத்த உள்ளோம். திண்டுக்கல் தொகுதியில் ஆறு ஓட்டுச்சாவடிகளில் இவை பயன்படுத்தப்படாது' என்றனர்.