10ம் வகுப்பு தேர்வு புதிய அறிவிப்பு

தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. ஏப்ரல், 7ல் அறிவியல் தேர்வு நடக்க உள்ளது.இந்த நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
அதில், '10ம் வகுப்பு அறிவியல் தேர்வு எழுத வரும் மாணவர் அல்லது தனித்தேர்வர் யாராக இருந்தாலும், செய்முறை தேர்வை எழுதியிருக்க வேண்டும். இல்லையெனில், அவர்களை அனுமதிக்க வேண்டாம். 'தியரி' எனப்படும், கருத்தியல் தேர்வு மட்டும், தேர்ச்சிக்கான கணக்கில் எடுத்து கொள்ளப்படாது என, ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.