செப்டம்பரில் தேர்வு எழுதியவர்கள் பிளஸ்–2 விடைத்தாள் நகல் இன்று பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை, 

செப்டம்பர் மாதம் பிளஸ்–2 தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் விண்ணப்ப எண்ணை பதிவு செய்து விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பின்னர் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் Application for Retotalling /Revaluation என்ற தலைப்பினை கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இவ்விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து 23–ந் தேதி காலை 10 மணி முதல் 25–ந் தேதி மாலை 5 மணிக்குள் உரிய முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் உரிய கட்டணத்துடன் ஒப்படைக்க வேண்டும்.

இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.