கட்டாய தமிழ் பாட பிரச்னைக்கு முன்னாள் நீதிபதி தலைமையில் குழு

 கட்டாய தமிழ் மொழி பாடப் பிரச்னைக்கு தீர்வு காண, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க, சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் அமைப்பின் பொதுச் செயலர்டாக்டர் சாதிக்தாக்கல் செய்த மனு:தெளிவான வழிமுறைகள்தமிழ்மொழி கற்றல் சட்டம், 2006ல் கொண்டு வரப்பட்டது. &'1 முதல், 10ம் வகுப்பு வரைகண்டிப்பாக தமிழ் மொழியைஒரு பாடமாகக் கற்க வேண்டும்&'எனஅந்த சட்டம் வரையறுத்துள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்த,தெளிவான வழிமுறைகள் மற்றும் விதிகளை உருவாக்கும்படிதமிழக அரசுக்கு, 2014 மே மாதம்மனு அனுப்பினோம்எந்த நடவடிக்கையும் இல்லை.

தற்போதுகல்வித் துறை அதிகாரிகள், 10ம் வகுப்பு வரைதமிழை கட்டாயமாக கற்பிக்க வேண்டும்&'எனவற்புறுத்துகின்றனர். மேலும், 2016 மார்ச் மாதம் நடக்கும் பொதுத் தேர்வில்தமிழ் பாடம் கட்டாயம் இருக்கும்&' எனவும் கூறுகின்றனர். அதிகாரிகளிடம் இருந்து உத்தரவுகள் எதுவும் வராததால்இதுவரை,தமிழ் பாடத்தை எங்கள் பள்ளிகளில் கற்பிக்கவில்லை. மேலும்தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படவில்லை.
தமிழ் மொழி கற்றல் சட்டத்தை அமல்படுத்தினால்மற்ற மொழிகளை கற்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவர். அவர்கள்படிப்பை பாதியில் விட்டுவிட வேண்டிய நிலை ஏற்படும். நாங்கள்தமிழ் மொழிக்கு எதிரானவர்கள் அல்லஆனால்சிறுபான்மை மொழிகளையும் கற்பிக்க வேண்டும் என விரும்புகிறோம்.எனவேநாங்கள் அனுப்பிய மனுவை பைசல் செய்யவும்அதுவரைபள்ளி கல்வி உத்தரவுக்கு தடை விதிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இதுபோன்றுபல மனுக்கள்உயர் நீதிமன்றத்திலும்மதுரை கிளையிலும் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களுக்குபள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் தாக்கல் செய்த பதில் மனு:பொதுத் தேர்வு தமிழ் ஆசிரியர்களை ஏற்பாடு செய்ய வேண்டிய பொறுப்புபள்ளி நிர்வாகத்துக்கு உள்ளது. 2006 - 07 முதலேஅரசு பள்ளிகள்அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில்தமிழ் மொழி கற்றல் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 10ம் வகுப்பு மாணவர்கள் தமிழ் பாடத்தைபொதுத் தேர்வில் எழுத வேண்டிய விவகாரத்தில்மனுதாரர்கள் விதிவிலக்கு கோர முடியாது.
சட்டம் அமலுக்கு வந்துஇறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுக்களை விசாரித்ததலைமை நீதிபதி எஸ்.கே.கவுல்நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கியமுதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: தமிழ் பாடத்துக்கு விதிவிலக்கு கோருபவர்களின் பிரச்னையைஉரிய அதிகாரி ஆய்வு செய்ய வேண்டும். 2016 மார்ச் மாதம்பொதுத் தேர்வு வருவதால்,இப்பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும்.
எனவேஉயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பது உகந்ததாக இருக்கும் எனநாங்கள் கருதுகிறோம். இதுகுறித்து ஆலோசித்துஒரு வாரத்தில் தெரிவிப்பதாக,அட்வகேட் ஜெனரல் உறுதி அளித்துள்ளார். விசாரணைநவ., 23க்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு,முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.