10ம் வகுப்பு முடிவு: 499 மதிப்பெண்கள் எடுத்து 2 பேர் முதலிடம்

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் முதலிடத்தை இரண்டு பேர் பெற்று உள்ளனர். விருதுநகர் நோபல் பள்ளியை சேர்ந்த சிவக்குமாரும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எஸ் ஆர் வி எக்செல் பள்ளியை சேர்ந்த பிரேமசுதா என்பவரும் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.