பத்தாம் வகுப்பு ரிசல்ட்: முதல் இடம் விருதுநகர், ராசிபுரம்; 50 பேர் 2வது இடம்

தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின. இதில் விருதுநகர் மாவட்டம் சிவகுமார், மற்றும் ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்செல் பள்ளி மாணவி 499 மதிப்பெண்கள் பெற்று மாநில முதலிடமும், கரூர் ஸ்டார் மெட்ரிக் பள்ளி மாணவி பிரதீபா உட்பட 50 பேர் 498 மதிப்பெண் பெற்று 2வது இடமும் பெற்றுள்ளனர். 224 பேர் 3வது இடத்தைப் பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ல் துவங்கி, ஏப்ரல் 13ல் முடிவடைந்தது. மொத்தம் 10.50 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில், 7,000 பேர் தமிழ் அல்லாத பிறமொழியை தாய்மொழியாக கொண்டு தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று காலை, 9:31 மணிக்கு வெளியாகின. இதில் விருதுநகர் மாவட்டம் சிவகுமார், ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்செல் பள்ளி 499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. மாநிலத்தின் 3வது இடத்தையும் இப்பள்ளியே பெற்றுள்ளது. மாநில 2வது இடத்தை கரூர் ஸ்டார் மெட்ரிக் பள்ளி மாணவி பிரதீபா உட்பட 50 பேர் 498 மதிப்பெண் பெற்றுள்ளனர். 3வது இடத்தை 224 பேர் பெற்றுள்ளனர்.